Showing posts with label பயங்கரமான கவிதைகள். Show all posts
Showing posts with label பயங்கரமான கவிதைகள். Show all posts

10.14.2010

பேய் எழுதிய காதல் கவிதை !

காதல் தோல்வியில்
செத்துப்
போனவனின் ஆவி
ஆத்மா சாந்தியடையாமல்
காத்துக்கொண்டிருக்கிறது
காதலியின்
ஆவிக்காக
அவள்
சாகும் வரை....

.....................................................
உயிரோடு
இருக்கும்போது
யாரோ ஒருவனைப்
பார்ப்பதுபோலாவது
பார்ப்பாய்
இப்போது
அப்படியும்
பார்க்கிறாயில்லை
நான் சாகாமலேயே
இருந்திருக்கலாமோ?


..................................................
மீண்டும்
பிறக்கச்
சொல்கிறார்கள்
முடியாது...
நீ இன்னும்
உயிர்வாழ்ந்து
கொண்டிருக்கும்
பூமியில்
உனக்குச் சின்னவனாய்
என்னால்
பிறக்க முடியாது...

..................................................

உயிரோடு
இருக்கும்போது
உன்னை எண்ணி
சாகவாவது
முடிந்தது
இப்போது
என்ன செய்வேன்?

6.08.2009

பேய்க் கவிதைகள்

இவை கர்ண கொடுரமான கவிதைகள், துணிவு இருப்பவர்கள் மட்டும் வாசியுங்கள்.

ரத்தக்காட்டேரி

உன் ரத்தத்தை
குடித்த
ரத்தக் காட்டேரி
சொன்னது
சீ ஏமாந்துவிட்டேன்
இது வெறும்
தேன்...


பிரேதம்

இறந்து போன
என் உடலை
பிரேத பரிசோதனை
செய்யும்போது
உள்ளேயிருந்து
எழுந்து வருவாய்
நீ....


ராசி

மரண வீடுகளுக்கு
போகாதே
எழுந்து இருந்து
விடுகினறனவாம்
பிணங்களெல்லாம்...


மூட நம்பிக்கை

கல்லு
அதன் மேல்
என் கழுத்து
``சதக்``
துண்டாகிப்போனது
என்
தலையும் உடம்பும் ...

என்ன செய்ய
ஊர் எல்லையில்
உள்ள பெயர்
தெரியாத சாமிக்கு
மனிதப்பலி
கொடுத்தால்
காதல் நிறைவேருமாமே!


நீ சொர்க்கம்


மோட்சம் கிடைத்த
பின்னும்
நிறைய ஆவிகள்
இங்கேதான்
சுத்திகொண்டிருக்கின்றன...
நீ இருக்கிற
இடத்தைவிட
சொர்க்கமா ?

காதலின் வாசம்

எரிந்து போன
என் சாம்பலையும்
பூசிக்கொள்வார்கள்
அவ்வளவு வாசம்
நம் காதல்
கலந்ததள்ளவோ!


இறுதி ஆசை

தலை நொறுங்கி
மூளை நசுங்கி
குடல் தொங்கி
கைகள் எங்கே
என்று தெரியாமல்
நாடு வீதியில்
அடிபட்டுக் கிடக்கிறேன்...
ஐயோ பிணமென்று
விலகிப்போகிறார்கள்
எல்லோரும்...
என் மனது
சொன்னது
இதயமே இன்னும்
கொஞ்சம் தாக்குப்பிடி
அவள் இந்த
வீதியால்
போகும் நேரம்
நெருங்கி விட்டது...


நடைப்பிணம்

யாரிடமும்
சொல்லிவிடாதே
நான் இறந்து
நீண்ட நாட்கள்
உன்னைப்
பார்ப்பதற்காகத்தான்
சுத்திதிரிகிறேன்...

சுனாமி

நீ கடக்கரை பக்கம்
நிறைய நாளாய்
போகததால்தான்
கடல் உன்னைப்பார்க்க
உன் வீட்டிற்கே
வந்தது..
மனிதர்கள் பாவம்
இனி அடிக்கடி
கடற்கரை பக்கம்
போய் வா!