தீபங்கள் அல்ல
சூரியன்களே
வந்தாலும்
ஒளி ஏற்ற
முடியுமா
இவர்களின்
வாழ்க்கையை....
இன்றைக்குத்தான்
இவளுக்குத்
தீபாவளி
பிச்சைக் காரனுக்கு
மட்டும்தான்
நிஜமான
தீபாவளி
மிச்சமாய்
நிறையக் கிடைக்கும்
தீபாவளிக்
கொண்டாட்டங்கள்
முடிந்தபின்னும்
தொடரும்
அதற்காக
வாங்கிய
கடன்கள்...
ஒரு அசுரன்
அழிந்ததைக்
கொண்டாடுகிறோம்...
அழிந்தது
அந்த ஒரு
அசுரன்
மட்டுமே
என்பதை
உணராமல் ..
தீபங்கள்
ஒளி ஏற்றட்டும்
இல்லங்களையல்ல
வாழ்க்கையை...



