8.05.2012

விரசம்

எனக்கும் அப்படி
வளர வேணுமென்று
சின்னவயதில்
ஆசைப்படுவேன்

வளர வளரத்தான்
அதைப் பாதுகாப்பதின்
கடினம் புரிந்தது

தவறுதலாய்
சிறிதாய் வெளியே
தெரிந்தாலும் போதும்
அப்பாடா
ஆயிரம் விஷமங்கள்

ஆனாலும் இந்த
சமூகம்
`எப்படிக் காட்டித்துப்
போறாள் பாரு`
என்று என்னைத்தான்
திட்டும்
அதைகாகவே அதை
மூடிமறைக்க நிறையவே
கஷ்டப்பட
வேண்டியிருந்தது

அப்படிக் கஷ்டப்பட்டு
மூடி மறைத்ததை
எத்தனையோ பேர்
சுற்றி இருக்கும்
போதே -ஒரு நாள்
வெளியே எடுத்தேன்
பாலுக்காக என்
குழந்தை
அழுதபோது ....

அப்போதும் சில
கண்கள் என்னை
விரசமாகத்தான்
பார்த்தன

அப்போது யாரும்
என்னைத் தப்பாக
சொல்லவில்லை
மாறாக அப்படிப்
பார்த்தவர்களையே
சொன்னது

முதன் முறையாக
பெண்ணாக இருப்பதன்
பெருமையை
இந்தச் சமூகம்
தந்தது எனக்கு

No comments: