கடவுளை வாழ விடுங்கள்..
மனிதனைக்
கடவுளாக்குவோம்
அந்த
கடவுளையே
கல்லால்
அடிப்போம்
அந்தக்
கல்லையே
மீண்டும்
கடவுளாக்குவோம்...
பாவம்
கடவுள்
மட்டும்
இன்னும்
கவனிக்கப்படாமல்
அப்படியே
இருக்கிறார்...
அப்பா
தப்புச் செய்வதும்
மகன்
தப்புச் செய்வதும்
எல்லா
இனத்திலேயும்
நடக்கும்
கடவுளே
தப்புச் செய்வது
நம் இனத்திலேதான்
நடக்கும்....
நம் இனத்திலேதானே
நிறையக்
கடவுள்கள்
பிறந்திருக்கிறார்கள் ....
மஜிக்
செய்பவர்களே
மறந்தும்
வாயால் திருநீறு
கக்குவது
போலவும்...
மூக்கால்
சிவலிங்கம்
எடுப்பது
போலவும்
வித்தை
செய்து விடாதீர்கள்
உங்களையும்
கடவுளாக்கி
விடுவார்கள்
இந்த
மனிதர்கள்
பிறகு
உங்கள்
நீலப் படத்தையே
குடும்பமாக
இருந்து
பார்த்து ரசிப்பார்கள்
அதை
போட்டு
கிட்ஸ் எடுக்கவே
காத்து கிடக்கிறது
ஒரு கூட்டம்
எதை
எடுத்தாலும்
போலி
செய்தோம்
கடைசியில்
கடவுளிலும்
போலி
செய்கிறோம்...
மனிதர்களே
முடிந்தால்
உங்கள்
பகுத்தறிவை
தொலைத்துவிடுங்கள்
கடவுள்
இல்லாத
மிருகமாகிப்
போவீர்கள்...
அந்தக்
கடவுளாவது
கலப்படம்
இல்லாமல்
நிம்மதியாக
இருக்கட்டும்...
பின்னூட்ட போதை
நான்
என்பது
மாயை
பின்னூட்டம்
என்பது
போதை...
சில
பாலின் போதை
சில
கள்ளின் போதை
இந்த
போதைக்கு
மயங்கியே
கிடக்கிறது
பிளாக்கர்
உலகம்
பாசம்
குடித்து
பாலைக்
கொடுக்கும்
ஒரு கூட்டம்
போதை
கொடுத்து
போதை
வாங்க
நினைக்கும்
கள்ளு குடிக்கும்
கூட்டம்...
கூடவே
வாக்கும் போட்டு
கள்ள
அரசியல்
நடத்தும்
இந்தக்
கூட்டம் ...
நானும்
கிடந்தேன்
ஒரு நாள்
மயங்கி...
வாந்தி
வரவே
எழுந்து
விட்டேன்
போதை
தெளிந்து...
இப்போது
நான்
பால் மட்டும்
குடிப்பதால்
கிட்ட வர
மறந்தது ...
கள்ளுக் குடிக்கும்
கூட்டம்
நன்றி
நல்லவனாய்
வாழவிட்டதற்கு...
இப்போதும்
பின்னூட்டம்
போடும்
நண்பர்களுக்கும்
நன்றி!
பாலூற்றி
இத்தளத்தை
வாழ வைப்பதால்...
இன்றைய காதல் கவிதை
உயிரோடுதானே
இருக்கிறேன்
எதற்கு இந்த
மௌன அஞ்சலி ....
என்
கவலையெல்லாம்...
உன் மௌனம்
எனக்கே
இவ்வளவு
வலியைக்
கொடுக்கிறதென்றால்
அதைத் தாங்கும்
உனக்கு
எவ்வளவு
வலியைக்
கொடுக்கும்
என்பதுதான்....
ஒரு பேய்க் கவிதை
காதலித்துச்
செத்தவர்களை
எரித்துவிடாதீர்கள்
உள்ளே
இன்னொரு
ஜீவன்
இன்னும்
உயிரோடு
இருக்கலாம்..
ஒரு சின்ன யதார்த்தம்
குடி போதையில்
வருபவன்
மோதி விடுவானே
என்று
வாசல் கதவை
திறந்து
வைத்தே
காத்திருந்தால்...
வந்தவன்
கேட்டான்
எவன் வருவான்
என்று
கதவைத்
திறந்து
வைத்திருக்காயடி??????
சும்மா ஜாலிக்காக
காதலித்தால்
கவிதை
வரும் என்கிறார்களே
உண்மையா???
காதலித்தவர்!
அடப் போப்பா
அப்படித்தான்
நானும்
நினைச்சேன்..
இப்போ
அவளைப்
பார்த்தால்
வார்த்தையே
வர மாட்டேன்
என்கிறது
இதில
கவிதை
வேறையா???
3.14.2010
2.25.2010
இரண்டுவரிக் கதை ( அல்லது எதோ என்று? )
தந்திரம்
பயந்தோடுவதாய் ஆவியைப் பார்த்துச் சிரித்தது
நெருப்பு- ஆவி ஒடுங்கி நீராகும்வரை...
ஆண்டு 2025
குடித்துக் குடித்தே வாழ்ந்தவன்
செத்துப்போனான் குடிக்க நீரில்லாமல்.
திருமணம்
?
முதிர்கன்னி
தண்டனை
கண்ணாடி பார்க்கும்போதெல்லாம் ஞாபகப்படுத்துகிறது
நெற்றி ! இறந்து போனவனை.
பசி
அம்மா தாயென்று எல்லோரையும் அழைக்கும்
உரிமை அனாதைக்கும் கிடைத்தது பிச்சையேடுக்கும்போது
பூச்சாண்டி
சொல்வதெல்லாம் உண்மை உண்மை உண்மை
அதற்குப்பின்னும் சாட்சி கேட்டார் நீதிபதி
பசி
வெறுமையான வயிறு நிரம்ப
பசி
இப்படியானதொரு முன்னைய எனது பதிவு..
கதை- இருந்தும் என்ன பயன் நீ பேசாமல் .
தலைப்பு - நிஜம்
கதை - யாவும் கற்பனை சில கதைகளின் முடிவில்
தலைப்பு- மூன்று பொய்
கதை- நான் சொல்லுவதெல்லாம் உண்மை நீதிமன்றத்தில்
தலைப்பு-இரு சொல் கதை
கதை- கற்பனை செய்துகொள்
தலைப்பு - ஜனநாயகம்
கதை- எல்லோரும் பேசலாம் எழுதிக்கொடுபபத்தை மட்டும்
தலைப்பு- கலர் டீ வி
கதை - ஓட்டுக்கு லஞ்சம்
தலைப்பு- ஒருசொல் கதை
கதை- முற்றும்
பயந்தோடுவதாய் ஆவியைப் பார்த்துச் சிரித்தது
நெருப்பு- ஆவி ஒடுங்கி நீராகும்வரை...
ஆண்டு 2025
குடித்துக் குடித்தே வாழ்ந்தவன்
செத்துப்போனான் குடிக்க நீரில்லாமல்.
திருமணம்
?
முதிர்கன்னி
தண்டனை
கண்ணாடி பார்க்கும்போதெல்லாம் ஞாபகப்படுத்துகிறது
நெற்றி ! இறந்து போனவனை.
பசி
அம்மா தாயென்று எல்லோரையும் அழைக்கும்
உரிமை அனாதைக்கும் கிடைத்தது பிச்சையேடுக்கும்போது
பூச்சாண்டி
சொல்வதெல்லாம் உண்மை உண்மை உண்மை
அதற்குப்பின்னும் சாட்சி கேட்டார் நீதிபதி
பசி
வெறுமையான வயிறு நிரம்ப
பசி
இப்படியானதொரு முன்னைய எனது பதிவு..
வரிக்கதை
தலைப்பு - கைபேசிகதை- இருந்தும் என்ன பயன் நீ பேசாமல் .
தலைப்பு - நிஜம்
கதை - யாவும் கற்பனை சில கதைகளின் முடிவில்
தலைப்பு- மூன்று பொய்
கதை- நான் சொல்லுவதெல்லாம் உண்மை நீதிமன்றத்தில்
தலைப்பு-இரு சொல் கதை
கதை- கற்பனை செய்துகொள்
தலைப்பு - ஜனநாயகம்
கதை- எல்லோரும் பேசலாம் எழுதிக்கொடுபபத்தை மட்டும்
தலைப்பு- கலர் டீ வி
கதை - ஓட்டுக்கு லஞ்சம்
தலைப்பு- ஒருசொல் கதை
கதை- முற்றும்
Labels:
ஒருவரிக்கவிதை
2.23.2010
வாழ்க்கை நிறையக் கவிதை 6
ஆயிரமோ
ரெண்டாயிரோமோதான்
கொடுத்துவிட்டுப்
போனான்...
எல்லோரும்
சொன்னார்கள்
கற்பிழந்தவள்
என்று
சீ
கற்பின் மதிப்பு
இவ்வளவுதானா?
..........................................
வேலைக்களைப்பைப்
போக்க குடித்தவன்
இழந்தான்
மனைவி தரும்
தேனீரில்
இருக்கும்
போதையை...
...........................................
குழந்தையின்
முதல் அழுகை
உணர்த்தியது
பிர சவம்
அல்ல
பிற சுகம்
............................................
எனக்கு
மட்டுமே
தெரிந்த ஒரு
ரகசியத்தை
சொல்ல நினைத்த
போதுதான்
அறிந்து கொண்டேன்
ஏற்கனவே
என்னை
அது
கொன்று விட்டிருந்தது...
.....................................................
தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்
கடவுள் சொன்னதை
கடைமுன்னே
எழுதிவைத்தான்
வட்டிக்கடைக்காரன்...
.....................................................
ரெண்டாயிரோமோதான்
கொடுத்துவிட்டுப்
போனான்...
எல்லோரும்
சொன்னார்கள்
கற்பிழந்தவள்
என்று
சீ
கற்பின் மதிப்பு
இவ்வளவுதானா?
..........................................
வேலைக்களைப்பைப்
போக்க குடித்தவன்
இழந்தான்
மனைவி தரும்
தேனீரில்
இருக்கும்
போதையை...
...........................................
குழந்தையின்
முதல் அழுகை
உணர்த்தியது
பிர சவம்
அல்ல
பிற சுகம்
............................................
எனக்கு
மட்டுமே
தெரிந்த ஒரு
ரகசியத்தை
சொல்ல நினைத்த
போதுதான்
அறிந்து கொண்டேன்
ஏற்கனவே
என்னை
அது
கொன்று விட்டிருந்தது...
.....................................................
தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்
கடவுள் சொன்னதை
கடைமுன்னே
எழுதிவைத்தான்
வட்டிக்கடைக்காரன்...
.....................................................
Labels:
கவிதை
2.13.2010
காதலர் தின சிறப்புக்கவிதை... ரெண்டு
பீச்
பூங்கா என்று
அலையாமல்
காதலர்
தினத்தைக்
கொண்டாட
கோயிலுக்குப்
போனோம்
விலையுயர்ந்த
ஐஸ் கிரீமோ
சிக்கன் 65 வோ
இல்லை ..
எனக்கு நீயும்
உனக்கு நானும்
இட்டுக்கொண்ட
திருநீறும்
சந்தனப்பொட்டும்
காதலை
பரிமாற வைத்தன
மற்ற
திருவிழாக்களைப்
போலல்ல
கோயிலில்
கூட்டம்
குறைவாகத்தான்
இருந்தது
காதலர்
தினத்தன்று
***********************
கூடப்படிக்கும்
பொண்ணு போடும்
வளையல்
பக்கத்துவீட்டுப்
பொண்ணு
கட்டும் சேலை
இப்படி இன்னும்
பல ..
என்று உன்
விருப்பப் பட்டியல்
தெரிந்திருந்தும்..
வாங்கித்தர
வசதியில்லாமல்....
நிலவைப்
பிடித்துத்
தருவேன்...
நட்ஷத்திரத்தை
பரிசளிப்பேன்
என்று
கவிதை எழுதி
சமாளிக்கும்
போது...
நீ சந்தோசப்
படுகிறாயா
அல்லது
நான்
கவலைப்படக்
கூடாது
என்பதற்காக
சந்தோசப்படுவதாய்
நடிக்கிறாயா?
பூங்கா என்று
அலையாமல்
காதலர்
தினத்தைக்
கொண்டாட
கோயிலுக்குப்
போனோம்
விலையுயர்ந்த
ஐஸ் கிரீமோ
சிக்கன் 65 வோ
இல்லை ..
எனக்கு நீயும்
உனக்கு நானும்
இட்டுக்கொண்ட
திருநீறும்
சந்தனப்பொட்டும்
காதலை
பரிமாற வைத்தன
மற்ற
திருவிழாக்களைப்
போலல்ல
கோயிலில்
கூட்டம்
குறைவாகத்தான்
இருந்தது
காதலர்
தினத்தன்று
***********************
கூடப்படிக்கும்
பொண்ணு போடும்
வளையல்
பக்கத்துவீட்டுப்
பொண்ணு
கட்டும் சேலை
இப்படி இன்னும்
பல ..
என்று உன்
விருப்பப் பட்டியல்
தெரிந்திருந்தும்..
வாங்கித்தர
வசதியில்லாமல்....
நிலவைப்
பிடித்துத்
தருவேன்...
நட்ஷத்திரத்தை
பரிசளிப்பேன்
என்று
கவிதை எழுதி
சமாளிக்கும்
போது...
நீ சந்தோசப்
படுகிறாயா
அல்லது
நான்
கவலைப்படக்
கூடாது
என்பதற்காக
சந்தோசப்படுவதாய்
நடிக்கிறாயா?
Labels:
காதலர் தின சிறப்புக்கவிதை
2.08.2010
Subscribe to:
Posts (Atom)