11.10.2011

தனிமை

நீ இல்லாத
தனிமையில்
நானும்
இருப்பதில்லை

நீ என்னைவிட்டுப்
போகும்போது
என்னையும்
எடுத்துக்கொண்டு
போய்விடுகிறாய்





10.01.2011

வாழ்க்கை நிறையக் கவிதை

அழாமல்
கவலைகளைக்
கொண்டாட
கவிதைகள்
கைகொடுக்கின்றன

கன்னத்
தை வருடும்
கண்ணீர்த்துளியை விட
தனிமையில்
நல்ல
நண்பன் இல்லை

கவலைகளை
ரசிக்கப்பழகாவிட்டால்
வாழ்க்கையின்
பெரும்பகுதி
ரசிப்பதற்குஎதுவும்
இல்லாமலேயே
கழிந்து விடும்

என் ஒவ்வொரு
கவலையிலும்
ஒளிந்திருக்கும்
நான்
தொலைத்த
சந்தோசத்தைக்
கண்டு பிடித்தே
என்
கவலைகளைப்
போக்கிக் கொள்கிறேன்

வாழ்க்கை நிறையக் கவிதை

தனிமையை

நேசிக்க

வைக்கும்

இரவுக்கு

நன்றி...


ஒரு

ஏகாந்தத்திற்குள்ளும்

ஒளிந்திருக்கலாம்

ஒரு மாபெரும்

புரட்சியின்

இரைச்சல் ...


யதார்த்த

முரண்பாடுகளிலும்

முளைக்கலாம்

ஒரு ............!


உழைத்துக்

கொண்டிருக்கும்

விழிப்புலன்

அற்றவனைப்

பார்த்தபோது

வெட்கித்

தலைகுனிந்தது

என் விழி...


சாவதில் ஒன்றும்

பயமில்லை

எனக்கு

ஆனால்

அதற்கு முன்

வாழ வேண்டும்

காத்திருத்தல்

எந்த ஒரு
கணத்திலும்
உனக்கும்
என் மீது
காதல் வரலாம்
அந்தக் கணம்
என்
மரணமாகக் கூட
இருக்கலாம் .....

9.04.2011

ஒரு காதலின் கதை

உயிர் உடலுக்குள்
காதல் உயிருக்குள்

சொல்லிக்கொண்டு
வருவதில்லை
வந்தபின்பு
எவ்வளவு
சொன்னாலும்
போவதில்லை
காதல்

என்னை மறந்துவிடு
என்று இலகுவாகச்
சொல்லிவிட்டாய்
அவ்வளவு இலகுவாக
மறக்க
முடியுமென்றால்
அது காதலே
இல்லை

எனக்கு
காதலிக்க மட்டும்தான்
தெரியும்
காதலை அழிக்கவல்ல

நான் உன்னோட
வாழ நினைத்தது
நான்
வாழ்வதற்காக அல்ல
உன்னை
வாழ வைப்பதற்காக


உன்னைப் பார்த்த
என் கண்கள்
எங்கே பார்த்தாலும்
அங்கே
கவிதை முளைக்கிறது

நீ வெளியே
வந்தால்
வெள்ளிக்கிழமை
தங்கக் கிழமை
ஆகிப்போகிறது

நீ
1,2,3,4...
எழுதியதைப்
பார்த்தபின்புதான்
வார்த்தைகளால்
மட்டுமல்ல
வெறும் இலக்கங்களாலும்
கவிதை
எழுதலாம் என்று
அறிந்து கொண்டேன்

உயிர்வாழ
உணவு
தேவையில்லை
நீ வருகின்ற
கனவு போதும்


எத்தனையோ
வருடங்களுக்குப்
பின்பு கூட
நாம் சந்திக்கலாம்
அப்போதுகூட
நான்
வாழ்ந்துகொண்டிருக்கிறேனோ
இல்லையோ
கட்டாயமாய்
உன்னைக்
காதலித்துக்கொண்டிருப்பேன்