தனிமையில்
நானும்
இருப்பதில்லை
நீ என்னைவிட்டுப்
போகும்போது
என்னையும்
எடுத்துக்கொண்டு
போய்விடுகிறாய்
தனிமையை
நேசிக்க
வைக்கும்
இரவுக்கு
நன்றி...
ஒரு
ஏகாந்தத்திற்குள்ளும்
ஒளிந்திருக்கலாம்
ஒரு மாபெரும்
புரட்சியின்
இரைச்சல் ...
யதார்த்த
முரண்பாடுகளிலும்
முளைக்கலாம்
ஒரு ............!
உழைத்துக்
கொண்டிருக்கும்
விழிப்புலன்
அற்றவனைப்
பார்த்தபோது
வெட்கித்
தலைகுனிந்தது
என் விழி...
சாவதில் ஒன்றும்
பயமில்லை
எனக்கு
ஆனால்
அதற்கு முன்
வாழ வேண்டும்