1.12.2011

மழையே உனக்கு மனசே இல்லையா?



மழையே உனக்கு
மனசே இல்லையா?

பெய்யத்தானே சொன்னோம்
நீயோ பேயாட்டம்
போடுகிறாய்

.......................................................

உனக்குத்தானே
இருக்கிறது
கடல்,ஆறு ,குளம்
என நிறைய
இடங்கள்
எதற்காக எங்கள்
வீடுகளுக்குள்ளேயும்
வருகிறாய்

......................................................

ஆக்கக் கடவுள்
என்று நினைத்துத்தானே
உன்னை ரசித்தோம்
பூசித்தோம்
நீயோ அழித்தல்க்
கடவுளாய்
ஆகிப்போனாயே....

....................................................

நாங்கள்
ஏற்கனவே சொந்த
நாட்டுக்குள்
அகதியாகிப்போனோம்
நீ சொந்த
வீட்டுக்குள்
அகதியாக்கிவிட்டாய்..

......................................................

அவசரப்பட்டு
இப்படிக் கொட்டித்
தீர்க்கிறாயே
அடுத்தவருடம்
முழுவதும்
காயப்போடவா?

.......................................................

வேண்டாம் நீ
போய்விடு
உன் தூறல்களைக்
கண்டால்கூட
பயமாயிருக்கிறது
இப்போது....

...........................................................................
.எங்க ஊரில் இன்னும் பெய்துகொண்டே இருக்கிறது மழை. இப்படியே போனால் ஒட்டுமொத்த ஊரே அகதி முகமாகிவிடும் .

1.10.2011

நீ மட்டும் போதும்

இந்தக் காதலுக்கு
எப்படியோ ஏதோ
ஒன்று
தேவைப்பட்டுக் கொண்டே
இருக்கிறது ..

கொஞ்சம் பொய்
முத்தம்
கவிதை
கண்ணீர்
இப்படி
ஏதோ ஒன்று
தேவைப்பட்டுக் கொண்டே
இருக்கிறது

என்
காதலுக்கு மட்டும்
இது எதுவுமே
தேவை இல்லை
நீ
மட்டும் போதும்

12.31.2010

ஒரு கவிதை ஒரு வாழ்த்து

ஒவ்வொரு
புதுவருடத்திலும்
எப்படியோ
வந்துவிடுகிறது
நிறைய
நம்பிக்கைகள்...

ஒவ்வொரு
வருடமும்
இவ்வாறு நிறைய
நம்பிக்கைகள்
வீணாகிப்போவதால்
இந்த வருடம்
போனவருடத்தில்
சாத்தியமாகாத
நம்பிக்கைகளை
சாத்தியமாக்குவது
என்ற
ஒரு நம்பிக்கையோடு
மட்டும்
ஆரம்பிக்கிறேன்
புது வருடத்தை

..................................................

வருடங்கள்
புதுப்பிக்கப்பட
வாழ்க்கை
பழசாகிப்போகிறது



இந்த
வருடமாவது
வருடத்தோடு
வாழ்க்கையும்
புதுப்பிக்கப்பட்டும்

புத்தாண்டு வாழ்த்துக்கள்
நண்பர்களே

12.19.2010

கொல்லாமல் விடு

கொஞ்சம் மௌனம்
கொஞ்சம் புன்னகை
போதும்
ஒரு உயிர்
செய்துவிடுகிறாய்
இறந்துவிடும்
எனக்காக

தூரங்களால்
நிர்ணயிக்க
முடியாது
பிரிவை
அன்பு இருக்கும்
உள்ளத்திற்கு
இருப்பதில்லை
பிரிவு..

நீ
என்பதில்
நீ மட்டுமில்லை
நானும்
இருக்கிறேன்

நீ எல்லோரையும்
கடந்து
செல்கிறாய்
என்னை மட்டும்
கடத்திச்
செல்கிறாய்

உன்
பெயரை
உச்சரித்துப் பார்
முன்பை விட
கனமாய் இருக்கும்
அதில்
நானும்
கலந்து விட்டேனே !

நான்
வாழ்வதற்கு
நீர் கூட
வேண்டாம்
நீ
வேண்டும்

சொர்க்கமோ
நரகமோ
உன்
சொல்லில்தான்
இருக்கிறது

நீ
சொல்லாமல்
விட்டாலும்
பரவாயில்லை
என்னைக்
கொல்லாமல் விடு

உன்னை
நினைத்துக்கொண்டு
வாழ்வதற்காகவேனும்
வேண்டும்
இந்த உயிர்

12.12.2010

பிரியமுடன் வசந்த் !!!!!!!!!



உன் பெயரிலே
இருக்குது
பிரியம்
அதுதான்
எல்லோருக்கும்
உன்மீது
பிரியம்....

நீ நாயகன்
கற்பனைகளின்
நாயகன்...

இளம் பெண்களின்
கனவிலும்
நாயகன்

உன் கூடவே
பிறந்தது
மட்டுமல்ல
உனக்குக் கொஞ்சம்
கூடவே இருப்பதும்
லொள்ளு ..

தமிழ்
மணத்தில்
மட்டுமல்ல
நிறைய
மனங்களிலும்
நீ நட்சத்திரம்

உன் எழுத்தில்
இல்லை
இலக்கியம்
ஆனால்
எல்லோருக்கும்
அது ஐக்கியம் ...

உன் கவிதை
நிரம்ப
ரசனை ..

நாங்கள்
வார்த்தைகளுக்கு
அர்த்தத்தை மட்டுமே
கொடுப்போம்
நீ
மட்டுமே
அழகையும்
கொடுப்பாய்....


சிரிக்க
மட்டுமல்ல
இடையிடையே
சிந்திக்கவும்
வைக்கிறாய் .....
அதோடு
எங்களை
நேசிக்கவும்
வைக்கிறாய்

நீ பிரபலமான
பதிவரோ
இல்லையோ
தமிழின்
பிரதானமான
பதிவர்...
ஒரு
பிரமாதமான
பதிவர்



மாப்பு வசந்து
தொடர்ந்து
நீ அசத்து
எனக்கு
இதற்காக
வச்சிடாத
ஆப்பு..

பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாப்ள !!!!!!!!