
5.25.2011
காதல் பழமொழிகள்
காதல் படுத்தும் பாடு
நான் வாழ்வதற்காகத்தான் பிறந்திருக்கிறேன் என்று தவறாக நினைத்துக்
கொண்டுவாழ்ந்து கொண்டிருந்தேன் .உன்னைப்பார்த்த பின்புதான் நான்
பிறந்தததுகாதலிப்பதற்காக என்று உணர்ந்துகொண்டு வாழ்வதை விட்டு
காதலிக்கத்தொடங்கிவிட்டேன்.
காதலுக்கும் வாழ்க்கைக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான் . வாழ்வதற்கு
கட்டாயம்உயிரோடு இருந்தாக வேண்டும் .காதலிப்பதற்கு உயிர் ஒன்றும்
அவசியமில்லை.
வாழ்க்கையை இழந்தபின் கடவுளாக இருந்தால் உயித்தெழலாம். காதலை
இழந்தபின் கடவுளாக இருந்தால்கூட உயிர்த்தெழ முடியாது.
......................................................................................................................................................................
அவளைப்பற்றி ஒரு கவிதை சொல்லச் சொன்னாள்.நான் மௌனமாகவே
இருந்தேன் . கோபித்துக்கொண்டு போய் விட்டால். மௌனத்தை புரிந்து
கொள்வது எப்படி என்று அவளுக்குச் சொல்லிக்கொடுக்காதது என் தவறுதான் .
அவளிடம் ஒரு முத்தம் கேட்டபோது மறுத்துவிட்டு வீட்டுக்குப் போனபின்பு
போன் பண்ணி நீ பாவம்டாஎன்று கொஞ்சினால் . அவளுக்குத் தெரியாது அவள்
தருகின்றமுத்தங்களை விட தராத முத்தங்களுக்குத்தான் சுவை அதிகம் என்று.
கோயிலுக்குப் போகும் பெண்கள் எல்லா பூ பறித்துக்கொண்டு சாமிக்குச்
சாத்தி விட்டு வருவார்கள். அவள் மட்டும் வெறும் கையேடு போய்
புன்னகைத்து விட்டு வருவாள் .சாமியும் நானும் மட்டும் புரிந்து கொள்வோம் .
தடுக்கி விழுந்த அவள் எழுந்து போய் விட்டால்.என்னால் இன்னும் எழ முடியவில்லை.
..............................................................................................................................................................
வானத்தில் மிதக்க சிறகு வேணும். காதலில் மிதக்க கனவு வேணும்.
கவிதை எழுத மூளை தேவையில்லை காதல் போதும்.
வாசிப்பு அறிவை பூரணமாக்கும் காதல் முழு மனிதனையே பூரணமாக்கும்.
தாய்க்குப்பின் தாரம் கடவுளுக்கு முன் காதலி.
நான் வாழ்வதற்கு உயிர் தேவையில்லை அவள் போதும்.
BY- மயாதி
5.10.2011
முத்தமின்றி ?
அளவுக்கதிகமாகக்
நஞ்ஞாகி
விடுவதில்லை
முத்தம்
முத்தம்
கொடுத்ததால்
கோபித்துக்கொண்ட
காதலியின்
கோபத்தைப்
போக்கியது...
ஒரு
முத்தம்
உனக்கு
ரகசியமாய்
கொடுக்கிற
முத்தத்தை
வெட்கத்தில்
வெளிப்படுத்தி
விடுகிறாய்...
வார்த்தைகளால்
வெளிப்படுத்த
முடியாத
காதலின்
விஸ்த்தீரத்தை
சிலவேளைகளில்
ஒற்றை
முத்தம்
வெளிப்படுத்தி
விடுகிறது
பேசுகிற
வார்த்தைகள்
தேவையற்றதாகிப்
போகலாம்
கொடுக்கிற
முத்தம்
எப்போதும்
தேவையற்றதாகிப்
போய்விடாது
பொல்லாத
காதல்...
ஒவ்வொரு
முத்தத்தின்
முடிவிலும்
தொடக்கி
வைத்து விடுகிறது
அடுத்த
முத்தத்திற்கான
எதிர்பார்ப்பை
உயிரை
இணைத்துவிட்டு
உதடு
பிரிந்து
விடுகிறது....
உனக்கு
நான்
தருகிற
ஒவ்வொரு
முத்தத்தின்
முடிவிலும்
உனக்கும்
எனக்கும்
இடையே
சின்னதாய்
ஒரு
இடைவெளி
வந்தாலும்
நுழைந்து விடுகிறது
ஒரு
முத்தம்
எனக்கு
காதலிக்காமல்
எப்படி
வாழத்தெரியாதோ
அப்படித்தான்
முத்தமிடாமலும்
காதலிக்கத்
தெரியாது
அருசுவைகளுக்கு
அப்பாற்பட்டது
முத்தத்தின்
சுவை.....