இலையுதிர் காலம்
உதிர்ப்பதற்கு எதுவுமின்றி
நான்
கீரியும் பாம்புமாய்
மனிதனும்
மனிதனும்
பழுதாய்ப்போன சோறில்
விஷ்க்கிருமி
அடங்கிப்போனது
பிச்சைக்காரனின்
பசி
வெற்றுச் சூப்பியை
சூப்பிச் சூப்பி களைத்துப்போன
குழந்தை நிறுத்தியது
அழுகையை
யாருமில்லாத தனிமையில்
வந்து போகின்றார்கள்
நிறையப்பேர்கள்
இறந்தவர்கள் உட்பட
எல்லாம் இருந்தும்
என்ன பயன்
நீயில்லாமல்
கனவு பொய்யாகும்
உண்மையாகும் போது
அவசரத்தில் நடந்த
குற்றம்
மூடி மறைத்தது
அவசரகருத்தடை
முற்றத்து ரோஜாவின்
முதல் பூவை ஆசையாய்
பறித்தவள்
சூட்டினால் கணவனின்
புகைப்படத்திற்கு
உண்மைக்கு அழிவில்லை
உண்மை பேசுபவர்கள்
அழியலாம்
சீதனம் கேட்டான்
செத்தது ஆண்மை
பசிப்பது பக்தனுக்கு
படைப்பது கடவுளுக்கு
பார்வையற்றவனுக்கு
கண் கொடுக்காவிட்டாலும்
பரவாயில்லை
கை கொடுங்கள்
பாசம் இருக்கும்
வீட்டில் பணத்திற்குத்
தேவை குறைவு
மனிதன் சொல்வதைக்
கேட்கின்றோமோ
இல்லையோ
பல்லி சொல்வதைக்
கேட்போம்
அழுவதற்கு
கண்கள் தேவையில்லை
மனசு போதும்
உதிர்ப்பதற்கு எதுவுமின்றி
நான்
கீரியும் பாம்புமாய்
மனிதனும்
மனிதனும்
பழுதாய்ப்போன சோறில்
விஷ்க்கிருமி
அடங்கிப்போனது
பிச்சைக்காரனின்
பசி
வெற்றுச் சூப்பியை
சூப்பிச் சூப்பி களைத்துப்போன
குழந்தை நிறுத்தியது
அழுகையை
யாருமில்லாத தனிமையில்
வந்து போகின்றார்கள்
நிறையப்பேர்கள்
இறந்தவர்கள் உட்பட
எல்லாம் இருந்தும்
என்ன பயன்
நீயில்லாமல்
கனவு பொய்யாகும்
உண்மையாகும் போது
அவசரத்தில் நடந்த
குற்றம்
மூடி மறைத்தது
அவசரகருத்தடை
முற்றத்து ரோஜாவின்
முதல் பூவை ஆசையாய்
பறித்தவள்
சூட்டினால் கணவனின்
புகைப்படத்திற்கு
உண்மைக்கு அழிவில்லை
உண்மை பேசுபவர்கள்
அழியலாம்
சீதனம் கேட்டான்
செத்தது ஆண்மை
பசிப்பது பக்தனுக்கு
படைப்பது கடவுளுக்கு
பார்வையற்றவனுக்கு
கண் கொடுக்காவிட்டாலும்
பரவாயில்லை
கை கொடுங்கள்
பாசம் இருக்கும்
வீட்டில் பணத்திற்குத்
தேவை குறைவு
மனிதன் சொல்வதைக்
கேட்கின்றோமோ
இல்லையோ
பல்லி சொல்வதைக்
கேட்போம்
அழுவதற்கு
கண்கள் தேவையில்லை
மனசு போதும்
1 comment:
Super.
Post a Comment