4.10.2010

ஒரு காதல் கடிதம்...

நீயில்லாமல்
வாழ்ந்தாலும்
கவிதை
இல்லாமல்
வாழமாட்டேன்....
என்னருகே
இல்லாதபோதும்
என் கவிதைகளில்
இருக்கத்
தவறுவதில்லை
நீ!



மௌனமாக
சிரிக்கவும்
சப்தமாக
மௌனிக்கவும்
முடிகிறது
காதலால்...



நான் என்பது
மாயையல்ல
அதனுள்ளே
நீ
இருக்கும்வரை...



கனவில்
வரப்போகும்
உனைப்
பார்ப்பதற்காகவே
உறங்காமல்
விழித்திருக்கின்றன
விழிகள்


நீ போகின்ற
தூரம் -வந்து
சேர்ந்துவிடுகிறது
என் அருகே...


இந்த
காதலுக்குத்தான்
எவ்வளவு
கல்லு
மனசு
நீ காதலிக்கவில்லை
என்று
எத்தனைமுறை
சொல்லியும்
இன்னும்
உயிர்வாழ்ந்து
கொண்டிருக்கிறதே
எனக்குள்...


எனக்கும்
உனக்குமிடையே
ஏதோ
இருக்கிறதென்று
எல்லோரும்
சொல்கிறார்கள்
அது
எனக்குள் இருக்கும்
காதலென்று
வெளியில்
இருப்பவர்களுக்குத்
தெரியாவிட்டாலும்
எனக்குள்ளே
இருக்கும்
உனக்குமா
தெரியவில்லை...



2 comments:

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

காதல் கவிதைகள் சூப்பர் மயாதி.

Anonymous said...

முதல் கவிதை உண்மை.